பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் மைசூர் சென்றார்.

அவருக்கு இடுப்பில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவருக்கு சின்னதாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

எஸ்.ஜானகி ஏற்கனவே 2012-ல் திருப்பதியில் நடந்த அன்னமாச்சாரியா கீர்த்தனை விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது,அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள குளியலறையில் கால் தவறி கீழே விழுந்து,அவரது தலையில் பலத்த அடிபட்டு அவரது தலையில் 7 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.