இந்தியாவின் தேசிய சொத்துகள் இரு இதிகாசங்கள்.
ஒன்று மகாபாரதம்,மற்றொன்று ராமாயணம்.
இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இந்தியாவின் தெய்வங்களாக இன்றும் வணங்கப்படுகிறார்கள். கடவுளர்களின் வீர,தீர செயல்களை சொல்வதுதான் இந்த இதிகாசங்கள்.
மகாபாரதத்தில் குருசேத்திரப் ,போர் மிகவும் முக்கியமானது. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த அந்த பதினெட்டு நாள் போர் மகத்தான நீதிகளை சொல்லியிருக்கிறது.
அர்ஜுனனின் அறியாமையைப் போக்க கிருஷ்ணன் சொன்ன போதனைகளே பகவத் கீதை. போர்க்களத்தில் பிறந்தது. இந்த பகவத் கீதைதான் வேதமாக கருதப்படுகிறது.
இந்த குருசேத்திரப் போரைத்தான் மிகவும் பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார்கள். ஆங்கிலப்படங்களுக்கு இணையாக 3 D முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு வழங்குகிறார்.
தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த பிரமாண்டப் படைப்பு வெளியாகிறது.
இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனனாக தர்ஷன்,கர்ணனாக அர்ஜுன் , கிருஷ்ணனாக வி.ரவிசங்கர் ,அர்ஜுனனாக சோனு சூட் மற்றும் திரவுபதையாக சினேகா ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள் .
இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசை அமைத்திருக்கிறார்.
ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய ஆள். கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்துள்ள மாற்றத்துக்கு ஆணிவேர் இவர்தான்.
வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரையிட திட்டமிட்டுள்ளனர்