இன்னிக்கி பிள்ளையார் சதுர்த்தி!
முதல் கடவுள்.முதல் சுழியே பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பாங்க.பள்ளிக்கூடத்தில் பிள்ளைய சேர்க்கிறபோது அப்படித்தான்.
அதனால அந்த பள்ளிக்கூட செய்தியை முதலில் ஆரம்பிக்கலாமே!
உத்தரப் பிரதேசத்தில கான்பூர் இருக்கு.
இங்க ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடம் இருக்கு!
இங்கு எட்டாவது கிரேடு படிக்கிற ஒரு பையனோட பாட்டி செத்துட்டாங்க.
அந்த மாணவன் லீவ் லெட்டர் எழுதுறான்.
“ஐயா, சேகர் செத்துட்டான். ( சேகர் என்பது அவனது பெயர்னு வச்சுக்குங்க.) அதனால அரை நாள் லீவு வேணும். அனுமதிங்க. இப்படிக்கு ,சேகர் “
பிரின்சிபால் அந்த லெட்டரை எப்படி படிச்சார்னு தெரியல. லீவு கிராண்டட்னு எழுதிட்டார்.
அப்பா கணேசா …இப்படியெல்லாமா ஒரு லெட்டரை சரியாம படிக்காம கையெழுத்துப் போடுற பிரின்சிபால் இருப்பார்?