கற்பழித்தல் ,ஆணவக்கொலை, தலித்துகள் படுகொலை என இந்திய நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இடித்துரைப்பார் எவரும் இல்லை என்பதை விட அவர்களின் வலிமை குறைந்து விட்டதால் ஆதிக்க வர்க்கத்தினர் கை ஓங்கி இருக்கிறது.
இதோ ‘ஏக் பாரத்’ தில் ஒரு கோரம் பதிவாகி இருக்கிறது.
ஜலான் மாவட்டம், அட்டா பகுதியில் ஒரு தலித் பெண் மாலையில் வீடு சென்றவள் வீடு திரும்பவில்லை.வயது 14.
இரவே போலீசில் புகார் செய்யப்பட்டது.
மறுநாள் மாலையில் அவள் சடலமாக கிடந்தாள் ஊருக்கு அருகில்.!
கடத்தப்பட்டு கண்கள் கூர்மையான கருவியினால் தோண்டப்பட்டிருந்தது.
பாலியல் வன்புணர்வுக்கான அடையாளங்கள் ,அறிகுறிகள்.!
போலீஸ் புலன் விசாரணையில் ரஞ்சித் என்பவன் அகப்பட்டிருக்கிறான்.இவன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு-ரேப் கேஸ் இருக்கிறது.