ஆதவனின் கரங்கள் நிலத்தில் விழாத வகையில் அடர்ந்து படர்ந்த மிகப்பெரிய காடு அமேசான் என்பார்கள்.
உலகத்தின் நுரையீரல் என அழைக்கப்படுகிற உயிர்காக்கும் காடு!

இந்தக்காட்டில் தீ!
நிலத்துக்கு அடியில் கனிமப் பொருட்கள் ஏராளம் என்பதால் பிரேசில் அரசே திட்டமிட்டு தீயிட்டிருக்குமோ?

மீத்தேன் எடுக்கிறேன் என்று நமது விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதைப் போல!
உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. 

காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது.
இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.
இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.