விஜய் டி.வி.யிலேயே கண்டனத்துக்கு உரிய நிகழ்ச்சிகள் காமடி கலாட்டக்கள்தான். தனிப்பட்ட தாக்குதல்கள் இந்த நிகழ்ச்சிகளில் காமடியாக பார்க்கப்படுகின்றன.
அந்தக் காலத்து நாடகங்களில் பபூன் என்கிறவர்கள் இடையிடையே வந்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி தூங்கி வழியும் மக்களை உசுப்பி விட்டுப் போவார்கள். சபா நாடங்களில் இது இருக்காது. ஆனால் விழாக்களையொட்டி நடக்கும் நாடகங்களில் அந்த ஆபாசங்களை கேட்கமுடியும்.
இதில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தவர்கள் கழுகுமலை சுப்பையா- கெங்காபாய் ஜோடியினர். இவர்களது காமடியை பார்க்க சைக்கிள்களில் விடலைகள் வருவார்கள்.
ஆக ஆபாசம், உருவ கேலி என்பது அந்த காலத்திலேயே இருந்தது. இந்த நவ நாகரீக காலத்திலும் இருக்கிறது.கழுகுமலை சுப்பையா-கெங்காபாய் ஜோடியை அப்படியே நினைவுபடுத்துகிறது ம.க.பா -பிரியங்கா ஜோடி நடத்துகிற காமடி ஷோக்கள்.
அநாகரீகத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.
அதை பிரபல நடிகை ஸ்ரீ பிரியா வன்மையாக கண்டித்திருக்கிறார், இவர் உலகநாயகனின் மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பிரமுகர்.
sripriya
✔@sripriya