கேப் மாரி என்கிற படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்திருக்கிறார். இதுதான் அவரது கடைசிப்படம் .தளபதி விஜய்யின் தந்தை என்கிற பெருமையும் உண்டு.
தளபதிக்கும் இன்றைய ஆளும் கட்சிக்கும் ஆகவே ஆகாது என்பதும் உண்மை. கேப்மாரியின் ஆங்கில சுருக்கமாக சி எம் என்பதாக குறித்திருக்கிறார்கள். இதுதான் காய்ந்த சுள்ளிகளில் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறது.
ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கிற இந்த படத்தின் புரமோஷன் வேலையை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இலவசமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
“சி.எம் எடப்பாடியை நினைத்துத்தான் இப்படி செய்திருக்கீங்க. ஆளும் கட்சியும் தமிழ் சினிமாவும் இப்பத்தான் அனுசரணையாகப் போயிட்டிருக்கு.இதுல நீங்க குச்சிய வச்சு குத்திப் பார்க்கிறீங்க.இந்த சேட்டைய அனுமதிக்க முடியாது “என்று வம்பாக வந்து கருத்து சொல்லியிருக்கிறார்.
இது போதாதா நெருப்பு இல்லாமலே பொங்கல் வைக்கிற மந்திரிகளுக்கு தீப் பந்தமே கிடைச்சிருக்கு.
இனிமேதான் ஆட்டமே இருக்கு!
மூட்டி விட்டுட்டிங்களே செல்வமணி!
“