அண்மையில் அதிமுக பேனர் விழுந்து அதனால் சுபஸ்ரீ என்கிற இளம் பெண் லாரி ஏறி மரணம் அடைந்தார். அது தொடர்பாக அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள் வரை கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.ஆனால் குற்றத்துக்கு வேராக இருந்தவரை விட்டு விட்டு லாரி டிரைவர் ,கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சில கண் துடைப்பு வேலைகளும் நடந்திருக்கின்றன.
இதை நடிகர் தளபதி விஜய் இன்று இரவு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கடுமையாக கண்டித்திருக்கிறார்.
“சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக யார் மீது ரீ ஆக்ட் பண்ணணுமோ அவர்களை விட்டு விட்டு கடைக்காரர் மீதும் லாரி டிரைவர் மீதும் காட்டுறாங்க. இதை நீங்க ஹேஷ் டாக் பண்ணலாம்” என்றார்.
அடுத்ததாக “எவனை எங்கே உக்கார வைக்கனுமோ அவனை அங்கே உக்கார வையுங்க “என சொல்ல வந்த இளைய தளபதி அதற்கு முன்னதாக திருக்குறளில் இருந்து “இதனை “என தொடங்கும் குரலை சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்தார். மீன் கடையில் இருக்கிறவனை பட்டாசுக் கடையில் உட்கார வைத்தால் அவன் அடிக்கடி பட்டாசு மீது தண்ணீரைத்தான் தெளிப்பான் “என்றார்.
ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் அடிக்கடி எழுந்ததால் வார்த்தைகளை தெளிவாக கேட்க முடியவில்லை.
அடுத்து தனது ரசிகர்கள் தாக்கப்படுவதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொண்டார்.
“என் பேனரை கிழிங்க.கட் அவுட்டரை அடிங்க. ஏன் ஏன் ரசிகர்கள் மீது கை வைக்கிறீங்க? அதை என்னால தாங்க முடியாது! இனியும் அப்படி நடந்தால்?” என்று சொல்லியபோது விஜய்யின் முகம் கடுமையாகியது. ரசிகர்களின் ஆரவாரமும் உச்சத்துக்குப் போனது.
“அரசியலில் புகுந்து விளையாடுங்க.ஆனால் விளையாட்டில் அரசியலை புகுத்தி ஆடாதீங்க!”என்றார்.
“ஒரு வாட்டி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் போனார்.கூடவே ஒரு அமைச்சரும் போய் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் மனசை கவரணும்கிறதுக்காக கலைஞரைப் பற்றி திட்டிக்கொண்டே வந்திருக்கிறார். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு கலைஞருக்கும் தனக்கும் உள்ள நட்பை பற்றி சொல்லிவிட்டு இப்படியெல்லாம் தப்பாக பேசவேண்டாம் என்றாராம்” என ஒரு நிகழ்வை நினைவு படுத்தினார்.
இரவு பத்து மணியைத் தாண்டியதால் தளபதி விஜய் சுருக்கமாகவே தனது பேச்சை முடித்துக் கொண்டார்.