என்னடா ஆபீஸ் வெறிச்சோடிக் கெடக்கே ,ஏதாவது கேஸ் வந்து மாட்டும்னு பார்த்தா சில்லறை சில்லறை கேஸா வந்து தொலையுது. பெரிசா மாட்ட மாட்டேங்கிதே என்கிற கவலையில் இருந்தார்களோ என்னவோ திமிங்கலமே வந்து சிக்கி இருக்கு.!
தயாரிப்பாளர் சங்கக் குழு ஜெ.சதிஷ்குமாரிடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கனமான பேப்பர்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கார்.
“உத்தம வில்லன் படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது கமல் சாருக்கு பண நெருக்கடி. என்னிடம் பத்துக் கோடி கடன் வாங்கினார். அதுக்கு 40 கோடி பட்ஜெட்ல ஒரு படம் பண்ணித் தர்றதா சொன்னார் .ஆனால் எதுவும் நடக்கல. அதனால சங்கம் தலையிட்டு பேசி பத்துக் கோடியை வாங்கித் தரணும்”னு புகார் கொடுத்திருக்கிறார்.
இப்ப சங்கம் சுறு சுறுப்பாகி இருச்சு. இந்த மழை நேரத்துக்கு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டு கேசை விசாரிச்சா செம மாஸ்!