சின்னத்திரையையே பெரிய கலக்கு கலக்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டினைப் பெற்ற நெடுந்தொடர் சித்தி.
அதனுடைய இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.சித்தி.2
இந்த நெடுந்தொடரை இயக்குவது சுந்தர் கே.விஜயன். சமுத்திரக்கனிக்கு தொடர்ந்து படங்கள் இருப்பதால் இந்த மாற்றம்.
இந்த தொடரில் பொன்வண்ணன் ராதிகாவுக்கு இணையாக நடிப்பார் என்று தெரிகிறது. மற்றும் ரூபிணி,நிஷாந்தி,டேனியல் பாலாஜி,ஆகியோர் நடிக்கிறார்கள். அடுத்த மாதத்தில் இருந்து லொக்கேஷன் கும்பகோணத்துக்கு இடம் பெயர்கிறது.