நடிகைகள் மட்டுமல்ல சினிமா உலகமே சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி என சொல்லி அழைப்பார்கள். ஆனால் 7 மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும்.
“ஏன் லேட்” என்றால் ” டிராஃபிக் ஜாம்” என்பார்கள். .போக்குவரத்து நெருக்கடி என்பது அன்று மட்டும் நடந்தது போல விளக்கம் சொல்வார்கள். சென்னையில் டிராபிக் நெருக்கடி என்பது விதிக்கப்படட விதி.
இங்கு சகித்துக் கொள்வதை போல கேரள மக்களும் பொறுமைசாலிகளாக இருப்பார்களா என்ன?
மஞ்சேரி என்கிற ஊரில் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு நூரின் ஷெரிப் என்கிற நடிகையை அழைத்திருந்தனர். இவர் ‘ஒரு அடார் லவ்’ என்கிற படத்தில் நடித்திருப்பவர்,இந்த படத்தின் மூலமாகத்தான் கண் சிமிட்டி நடிகைங்கிற பெயர் பிரியா பிரகாஷ் வாரியாருக்கு கிடைத்தது.
குறிப்பிட்ட நேரம் கடந்தும் நடிகை வராததால் கூட்டத்தினர் கோபத்தில் இருந்திருக்கிறார்கள்.
காலதாமதமாக நடிகை கடைக்குள் புகுந்ததும் கூட்டத்தினர் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். இந்த சமயத்தில் யாரோ ஒருவரின் கை நடிகை நூரினின் மூக்கில் பட்டு ரத்தம் வரத் தொடங்கி விட்டது.