இதுவரை இயக்குநர் -நடிகர் சுந்தர்.சி.இந்த அளவுக்கு காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியதில்லை. மழை நீர் மண்ணோடு கலந்து ஓடியதை போல அதாவது குறுந்தொகை காட்டிய “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்தான் தாம் கலந்தனவே”என்பதை போல பின்னிப் பிணையும் காட்சி ,இது போதாது என உதடு கடித்து முத்தம்…இருட்டு படத்தில் சுந்தர்.சி.யும் ,ஷாக்க்ஷி சவுத்ரியும் நடித்த நெருக்கமான காட்சி டிரெய்லரை சுட்டு எரிப்பது மாதிரி இருக்கிறது.
வி.இஜட் .துரையின் இயக்கத்தில் வரவிருக்கும் இருட்டுப் படத்தின் முரட்டுத் தனமான காட்சி. கிச்சாவின் கேமரா ரசனையுடன் படமாக்கி இருக்கிறது.
இசுலாமிய பின்னணியில் ஜின் என்கிற அமானுஷியம்தான் கதை. ஹாரர் மூவி.
இந்த காட்சியில் நடித்த அனுபவம் பற்றி சுந்தர்.சி.யிடம் கேட்காமல் இருக்க முடியுமா?
“இந்த காட்சியை ஊட்டியில் படமாக்கினார்கள். இதுவரை இப்படியான காட்சிகளில் நடித்ததில்லை. நெருக்கமான காட்சிகளை படமாக்கிய அனுபவம் இருந்தாலும் இந்தப் படத்தைப் போல இருந்திருக்காது.
இந்த காட்சி படமாகும்போது ஸ்பாட்டுக்கு என் மனைவியும் வந்து விட்டார் . இயக்குநரும் விடுவதாக இல்லை. 10 ,20.டேக் வரை போகிறது. அவர் சொன்னபடி நடித்திருந்தால் உதட்டையே பிய்த்து எடுத்திருக்க வேண்டும். சீன் போகிற போக்கைப் பார்த்து விட்டு என் வீட்டம்மா வெளியில் போய் நின்று விட்டார்.” என்றார் .
அருகில் அமர்ந்திருந்த ஷாக்க்ஷியிடம் அனுபவம் எப்படி என்று கேட்டதற்கு சொன்னாரே நேரில் கேட்டிருக்கவேண்டும். “வெரி நைஸ் !”