தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் தமிழக நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினர் . மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார்.அதே போல் நடிகர் தனுஷ் ரூ.ஐந்து லட்சம் தலைவர் நாசரிடம் வழங்கினார்.அப்போது, துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், மனோபாலா, லலிதகுமாரி, உதயா மற்றும் பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர்.மொத்தமாக நிதி சேர்ந்ததும் நடிகர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.