நடிகைகள் மலையாள சினிமா உலகத்தில் சந்திக்கிற செக்ஸ் டார்ச்சர்களைப் பற்றி நீதிபதி கே.ஹேமா விரிவான அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்திருக்கிறார். அப்போது நடிகை சாரதாவும் அங்கிருந்திருக்கிறார்
“ஷூட்டிங் லொக்கேஷன்களில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. நடிகைகளுக்கு போதுமான கழிப்பறைகள் இல்லை. உடை மாற்றிக்கொள்ளும் வசதிகளும் போதுமான அளவு இல்லை. நடிக்கவரும் நடிகைகளுக்கு செக்ஸுவல் தொல்லைகள்,படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டிய இழிவான செயல்கள் நடக்கின்றன. சாட்சியம் சொல்வதற்கு நடிக நடிகையர் தயங்குகிறார்கள்.போதை மருந்துகள், மது எல்லாமே இருக்கிறது”என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கமிட்டி சொல்கிற பரிந்துரைகளை ஏற்க மறுக்கிறவர்களை தடை செய்வதற்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.