சிலருக்கு சீட்டாடுவது போதை. பலருக்கு பெண்களே போதை.!
டிவிட்டர் ,ஃ பேஸ்புக் ,இன்ஸ்ட்ராகிராம் இல்லாமல் உலகமே இல்லை என்றாகிவிட்டது .இதுவும் போதைதான்.
கட்டுடலை வெட்டவெளியில் காயப்போடுவதும் அதை படமாக்கி வெளியிடுவதும் ஒருவகை போதைதான்.!
திரிஷாவுக்கு டிவிட்டர் போதை.!
“இந்த போதையில் இருந்து விலகுகிறேன் .ஆனால் விரைவில் சந்திப்பேன்”என சொல்லி விடை பெற்று இருக்கிறார்.
சமூக வலைப்பக்கத்தில் அதிக ஈடுபாடுள்ளவர் திரிஷா.அடிக்கடி கருத்துகளை வெளியிடுவார்.அதிலிருந்து ஏன் ,எதற்காக வெளியேறுகிறார் .எதை மறக்கப்பார்க்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
ஒரு வேளை ராணாவின் கல்யாண செய்தியின் பாதிப்பாக இருக்கலாமோ?