ப.வரிசைப்படங்களை எடுத்து வெற்றிக்கோட்டைக் கட்டியவர்தான் மறைந்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி ,பணத்தோட்டம் ,கலங்கரை விளக்கம் ,சந்திரோதயம் ,குடியிருந்த கோவில் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,நடித்த பாலும் பழமும் ,பாதகாணிக்கை ,பாகப்பிரிவினை மற்றும் பஞ்சவர்ணக்கிளி ஆகிய எல்லாப்படங்களுமே விழா கொண்டாடிய படங்கள்தான்.ஆனால் இத்தனை வெற்றிப்படங்களை கொடுத்த வேலுமணி வேறு சில படுதோல்விப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.இதனால் அவர் கட்டிய பணக்கோட்டை உடைந்து சிதறியது.
கடைசி காலத்தில் பஸ்ஸில் பயணம் செய்கிற நிலை.
ஒரு தடவை இவர் பஸ்ஸில் செல்வதைப்பார்த்த மேஜர் சுந்தரராஜன் “வாங்க முதலாளி காரில் கொண்டுபோய் இறக்கிவிடுகிறேன்” என்று சொன்னதற்கு “இன்னிக்கி எறக்கி விட்டுடுவே ,நாளைக்கு?”என்று கேட்டுவிட்டு பஸ்சிலியே சென்றுவிட்டார்.
அன்னை அபிராமி படம் கே.ஆர்.விஜயாவின் சம்பளப் பாக்கிக்காக தன்னுடைய தோட்டத்தையே எழுதிக் கொடுத்தவர்தான் வேலுமணி.அதுதான் பின்னர் கே.ஆர்.விஜயா தோட்டம் என அழைக்கப்பட்டது. ஷம்மிகபூரை வைத்து ராஜ் குமார் என்கிற இந்திப் படத்தை எடுத்தார் .அந்தப்படம்தான் அவரை அதலபாதாளத்துக்கு கொண்டுபோனது.
அத்தகைய வேலுமணியின் குடும்பம் இன்று வறுமையில் வதங்கிக்கிடக்கிறது. இன்றைய பெரும்பாலான தயாரிப்பாளர்களின் நிலையும் வறுமைதான்.! உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்பார்கள்.நான்கு தலைமுறைகளை கண்ட ஏவி .எம் .முத்தான படங்களை எடுத்தது. அந்த நிறுவனத்திடம் இன்று ஒரு படம் கூட இல்லை. கொலம்பியா,சன் நிறுவனங்களிடம் இருக்கின்றன.
வெற்றிப்படங்களைக் கொடுத்த அமரர் வேலுமணியின் பேத்தி புவனா சரவணன் என்பவர் தற்போது நடிகர் ராகவா லாரன்சுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். உண்ணுவதற்கு உணவு இல்லை.வசிப்பதற்கு வீடு இல்லை என்பதாக.!
”மதிப்பிற்குரிய திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு,
பல வெற்றிப் படங்களை தயாரித்து, புரட்சித் தலைவரின், புரட்சித் தலைவியின் பெரும் அபிமானம் பெற்றவர் எனது தாத்தா வேலுமணி என்பது எல்லோரும் அறிவார்கள்.
தற்சமயம் நானும், எனது தாயாரும் மிகவும் கஷ்டமான, மோசமான நிலையில் உள்ளோம். எனது தாயார், 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால் மிகவும் அவதிப்படுகிறார். தற்சமயம், நாங்கள் கேரளாவில் உள்ளோம். இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. தங்குவதற்கு வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நானும், எனது தாயாரும், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவதிப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.
நானும் எனது தாயாரும் எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெற உங்களின் உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன். ஆந்திரவாசிகளை, இதர தேச வாசிகளை அந்தந்த முதல்வர்களிடம் பேசி சொந்த ஊர் அனுப்பி வைத்தீர்கள் பத்திரிகை ஊடகங்களில் பார்த்தேன். கேரளாவில் ஆதரவின்றி தவித்து கொண்டுள்ளோம். தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கிறோம்.
நம் முதல்வரிடம் பேசி சொந்த ஊர் அனுப்ப உதவுங்கள். சாப்பாடு கூட இல்லை. நான் பெண்ணாக இருப்பதால் முடியவில்லை. ப்ளீஸ் கேரளாவில் உள்ள எங்களை மீட்கவும். உங்களைத் தவிர எங்களை காப்பாற்று யாரும் இல்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடம் கை ஏந்தி மண்டியிட்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எங்களை காப்பாற்றுங்கள்.
இப்படிக்கு, அன்புடன்
புவனா சரவணன்”