திறமைசாலிதான் இந்த தயாரிப்பாளர்.
மிகவும் சேஃப்டியாக தன்னுடைய காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விட்டார்.
எவன் காரை நிப்பாட்டுவான் ,ஜம்முன்னு போயிட்டே இருக்கலாம் என்று நினைத்து மதுப்பாட்டில்களை அடுக்கிவிட்டார் காருக்குள்.
சென்னை மதுரவாயல் அருகே ஸ்டிக்கர் ஒட்டிய காரை மடக்கி சோதனை செய்தனர். மாட்டிக்கொண்டார் மன்னன்.248 பாட்டில்கள்.
மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கலைச்செல்வன் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 சினிமாவை தயாரித்தவர். இவரோடு இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்