லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்திநடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “எனக்கு இன்னோரு பேர்இருக்கு”டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார்இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகைஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் ஆசிபெற்று இப்படத்தின்படபிடிப்பு துவங்கியது.அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்திற்காகசமீபத்தில் வித்தியாசமான அதேநேரம் சுவரஸ்யமான சண்டைக்காட்சி சென்னையில் மோகன்ஸ்டுடியோவில் பெரும் பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பலபடங்களில் வில்லன்களாகநடித்தமன்சூர்அலிகான்,பொன்னம்பலம், மொட்டைராஜேந்திரன் ஆகியோருடன் சரவணன், கருணால், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர்நடித்தனர். சூப்பர் சூப்புராயன் மேற்பார்வையில் படமாக்கப்பட்ட சண்டைகாட்சியில் மன்சூர்அலிகான் நடித்த பிரபல வேடமான கேப்டன் பிரபாகரன் படத்தின் வில்லன் வேடத்திலும்,பொன்னம்பலம் நடித்த பிரபல வேடமான நாட்டமை படத்தின் வில்லன் வேடத்திலும்நடித்தனர்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இந்த படபிடிப்பு மாலை 6 முதல் காலை 6 வரைதொடர்ந்து நடைபெற்றது. ஒருநாள் இந்த படபிடிப்பில் கலந்து கொள்ள இருந்தஜீ.வி.பிரகாஷ் குமார் மிகுந்த டிராப்பிக்கில் சிக்கி கொள்ள, நேரம் தவறக்கூடாது என்றுஆட்டோவில் வந்திறங்கி படபிடிப்பில் கலந்து கொண்டார்.கண்னை நம்பாதே பாடல் கானா பாலா குரலில் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில்இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.படப்பிடிப்பு முடிவடையவிருக்கும் இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே “எனக்குஇன்னோரு பேர் இருக்கு”படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது.