ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோரது நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் தனி ஒருவன்.
தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்து அதன் திரைக்கதை உருவாக்கத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறார் மோகன் ராஜா.
இப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஹரிஷ் உத்தமன், இயக்குநர் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து,தனி ஒருவன்-2 குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மோகன் ராஜா, ”தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு தகவல்.., தனி ஒருவன் 2 பற்றி மாஸ் அப்டேட் விரைவில் வெளியாகும்” என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் மோகன்ராஜாவிடம் கேட்டபோது, “கொரோனா லாக்டவுன் முடிந்து நிலைமை எல்லாம் சரியாகட்டும்.ரவியும் இப்போ பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் அறிவிப்பு வெளியாவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன் அடுத்த 2 மாதங்களில் தனி ஒருவன் -2 பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகும் “என்கிறார்