பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து அங்கு போதைப்பொருள் விவரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுமத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு,அதைத் தொடர்ந்து,ரியாவின் சகோதரர் சோவிக், சுஷாந்த் சிங்கின் மேலாளர், வேலைக்காரர் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். இவ்விவகாரத்தில் கைதான வர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சாராஅலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விசாரணை வளையத்தில் உள்ள ஜெயா ஷா என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் முதலில் கரிஷ்மா பிரகாசிடம் விசாரணை நடத்துவோம். அதன்பிறகு தேவைப்பட்டால் நடிகை தீபிகா படுகோனேக்கு சம்மன் அனுப்பப்படும்” என்றார்.இவ்விவகாரத்தில் . அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலரின் பெயர்கள் வெளிவரலாம் என கருதப்படுவதால்,பாலிவுட் திரையுலகம் கலக்கம் அடைந்துள்ளது.