சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான இவர் சின்ன திரையில் தொடர்களில் நடிப்பதை மறுத்து வந்த அவர் மேல்நாட்டு மருமகன் என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.
மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வீரா கவனிக்க,பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் – வாரஸ்ரீ.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவரிடம் கேட்டோம்…
விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம். செல்பி என்கிற வியாதியின் கருப்பு பக்கங்களை மிக நுணுக்கமான திரைக்கதை மூலம் உணர்த்தி உள்ளோம். புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.காமெடி கலந்த திகில் படமாக சண்டிக்குதிரை உருவாகி உள்ளது என்றார் இயக்குனர் அன்புமதி.