நல்லவை அவ்வளவாக மனதில் நிற்பதில்லை.!
அல்லவை அவ்வப்போது அலையடிக்கும்!
நடிகை விசித்ராவை நினைவில் வைத்திருக்கிறவர்கள் ‘மடிப்பு அம்சாவை’ மறந்திருக்க மாட்டார்கள்.
ஒரு காலத்தில் விசித்ரா கவர்ச்சி நடிகைதான்.! அவர் நடித்திருந்த பல படங்கள் சென்ஸாருக்கு உட்பட்டு ,’கட் ‘பட்டுதான் வெளியாகின.
இன்று அமைதியான ,உயர்வான வாழ்க்கை. கணவர் ,மூன்று ஆண் பிள்ளைகள். மூவரில் இருவர் ‘டிவின்ஸ்’.
பிரபல இணையதளத்துக்கு அளித்திருக்கிற பேட்டியில் சில உண்மைகளை சொல்லியிருக்கிறார்.
மம்மூட்டியை இயக்கிய ஒருவருக்கு விசித்ரா விட்ட பளார் அறையும் அதில் ஒன்று.
“கேரளத்தில் ஷகீலா கொடி பறந்த காலம். அந்த நேரத்தில் ஒரு இயக்குநர் என்னிடம் கதை சொன்னார். சொல்லப்பட்ட கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.
நடித்து முடித்துக் கொடுத்து விட்டேன்.
சில மாதங்கள் கழித்து அதே டைரக்டர் என்னிடம் வந்து சில காட்சிகள் எடுக்கப்படாமல் விடுபட்டுப் போய்விட்டன. பெரிய மனது பண்ணி வந்து நடித்துக்கொடுக்கவேண்டும் என்று கேட்டார். என்னால் அந்த படம் வெளியாவது நின்று விடக்கூடாதே என்று எண்ணி ஒத்துக்கொண்டேன்.
அவர் எடுத்தது என்ன சீன்கள் தெரியுமா?
ஒரு குளியல் சீன் . ஒரு ரேப் சீன் !
படம் வெளியானபோது போஸ்டரில் ரேப் சீன் படமும் ‘ஏ’ முத்திரையும்தான்! ஏண்டா அந்த படத்தில் வேற சீனே இல்லையா போஸ்டரில் போடுவதற்கு?
கோபமான கோபம். சில மாதங்களுக்கு பிறகு ஒரு பொது நிகழ்ச்சிக்கு அந்த டைரக்டர் வந்திருந்தார்.
அருகில் சென்று சட்டைக் காலரை பிடித்துக்கொண்டு விட்டேன் பளார் அறை !
இன்னொரு சம்பவம், தமிழ்ப்பட டைரக்டர் ஒருவர் போனிலேயே கதை சொன்னார். வழக்கப்படி எப்படியெல்லாம் கேரக்டரை உயர்த்தி சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொன்னார். அந்த படம் எனக்கு ஒரு பெரிய திருப்பு முனையைத் தரும்னு சொன்னார் .
கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?
மேடம் ,இந்த கதையில் ஒரு சீனில் உங்கள் தொப்புளில் விளக்கெண்ணெய் ஊத்துறோம்னார் .ஒரு படத்தில பம்பரம் விட்டாங்க. நாம்ப விளக்கெண்ணயை ஊத்துறோம்!
விளக்கெண்ணெயை ஊத்துறது மூலம் என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்டேன்.
விளக்கெண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னார் பாருங்க. அந்தாளு மட்டும் எதிரில் இருந்தார்னா எட்டி ஒரு மிதி விட்டிருப்பேன். போன்ல பேசினதுனால தப்பிச்சார்.” என்றார் விசித்ரா.
அடேய் பாவிகளா! இப்படியெல்லாம் சீன் சொல்லுவீங்களா?