மணிரத்னம் தனது கனவு படைப்பாக இயக்கி வரும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.இதில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும்,ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாகவும்,கார்த்திவல்லவராயன் வந்தியத்தேவனாகவும், விக்ரம் பிரபு சேந்தன் அமுதனாகவும் பார்த்திபன்பெரிய பழுவேட்டரையராகவும் ,ரகுமான் சின்ன பழுவேட்டரையராகவும், ஜெயராம்ஆழ்வார்க்கடியானாகவும், இளையதிலகம் பிரபு அனிருத்த பிரம்மராயராகவும் அஷ்வின் கக்குமனுகந்தமாறநக்கவும் நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி/ மந்தாகினி தேவி என இரட்டை வேடத்திலும், திரிஷாகுந்தவையாகவும்,ஐஸ்வர்யா லக்ஷ்மி பூங்குழலியாகவும் நடிக்க மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் அதிதி ராவ் ஹைதரி,கிஷோர்,லால் ரியாஷ் கான்,பேபி சாரா உள்பட மெகா நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது .
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டு , இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மனை,பாதாளஅறை ,ஜெயில், தர்பார் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது . அடுத்த கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்த நிலையில்,அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில்தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிரத்னம் படப்பிடிப்பு குறித்து சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளாராம்.அதன்படி அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை அல்லது ஐதராபாத்கில் நடத்த திட்டமிட்டுள்ளாராம். தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது என்கிறார்கள்.