பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.
இப்பத்தில் கார்த்தியின் ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகிய இரட்டை கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
இப் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை அருகே ரூ. 2 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது.
இந்த அரங்கில் பல முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில், கொரோனா வைரஸ் 2 வது அலை காரணமாக இப்பட த்தின் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
இதனால் ரூ. 2 கோடி செலவு செய்து அவசர அவசரமாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு தற்போது பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடப்பது தயாரிப்பு தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது குறையும் என்பதே இன்னும் சரிவர தெரியாத நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி கிடைத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்குவைத்து என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம் படக்குழு.
ஏற்கனவே கார்த்தி நடித்துவரும் ’பொன்னியின் செல்வன் திரைப்படமும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்திற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுஉள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.