கடந்த ஆண்டு இறுதியில் ஐதராபாத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்குச் சென்றார். இரவு பகலாக நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு இந்த மாதம் 10-ஆம் தேதி முடிந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் இருந்து, மீண்டும் தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவர் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யாஅஸ்வின் தனது டுவிட்டரில் வெளியிட்டு, நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா தொற்றை வென்றெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.