கடந்த வாரத்தில் ‘தெறி’ பட வெளியீட்டில் பிஸியாக இருந்த தயாரிப்பாளர் தாணு, தற்போது மீண்டும் தான் தயாரிக்கும் இன்னொரு படமான ‘கபாலி’ வேலைகளில் களமிறங்கிவிட்டார். பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினி காந்த் சர்வதேச தாதாவாக நடிக்கிறார். நடிகைகள் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நடிகர்கள் கலையரசன், தினேஷ், கிஷோர், ஜான் விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.
ஒரு சில ‘பேட்ஜ் ‘ வேலைகளை தவிர்த்து மற்ற படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதமாக ஆரம்பித்துள்ளது. அதோடு படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பித்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித்தும், தயாரிப்பாளர் தாணுவும்’ ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளனர் .