தமிழ்த்திரையுலகில் கடந்த 2012-ல் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மாசி படத்தின் மூலம் கவர்ச்சி கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா குப்தா
தமிழில் சரிவர பட வாய்ப்புகள் அமையாததால் இந்தி, கன்னடம்,மலையாளம், தெலுங்குஉள்ளிட் ட பிற மொழி படங்களில் பிசியாகவே நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களின் மீது மிகவும் ஆர்வம் காட்டி வரும் இவருக்கு இன்றளவும் தமிழ் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.தற்போது அர்ச்சனா குப்தா வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மீண்டும் தமிழில் மிக விரைவிலேயே புதிய திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளஅர்ச்சனா குப்தா, கவர்ச்சியில் மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ஏற்கனவே தனது யோகா புகைப்படங்களைதனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளவர், தற்போது கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவதால், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக யோகாவின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடற்கரையில் தனது உடலை வில்லாக வளைத்து யோகா செய்து அசத்தி புகைப்படங்களையம் வெளியிட்டுள்ளார் .இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.