பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “தெறி” திரைப்படம் பேருந்தில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பயணிகளில் ஒருவர் இந்த செய்தியை நடிகர் விஷால் நம்பரை இணையதளம் மூலம் கண்டறிந்து அவரை போனில் தொடர்பு கொண்டு இச்செய்தியை கூறியிருக்கிறார்.
அந்த செய்தியை உறுதி செய்யும் விதமாக நடிகர் விஷால் அந்த பயணியிடம் ஒளிபரப்பாகும் அந்த படத்தை செல் போனில் வீடியோ எடுக்குமாறு சொல்லவே அந்த பயணியும் நடந்தவற்றை செல் போனில் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.
இதை அடுத்து விஷால் திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் இதைப் பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருட்டு விசிடி சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியின் அணையின்படி ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் இருவரும் மதுரவாயில் அருகே அந்த பேருந்தை மடக்கிப் பிடித்து அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுனரை கைது செய்தனர்.