தமி ழ்நாடு ,இயல்,இசை,நாடக மன்றத்தின் புதியதலைவராக நடிகர் வாகை சந்திரசேகர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழகஅரசுவெளியிட்டுள்ள செய்திகு றி ப் பி ல்கூறியிருப்பதாவது:”ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநிலஅளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மைவாய்ந்த தமிழகக் க லை க ளைப்போற்றி, பேணிப்பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடுஅரசுவழங்கும்நல் கை யி னை க்கொண்டு கலைஞர்கள் பய னடையும் வகையில் பல்வேறுகலைப் பணித்திட்டங் களை தமிழ்நாடு இயல்இசை நாடகமன்றம் செயல்படுத்தி வருகிறது.
அதேபோன்று, நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறுபரிமாணங்களை உணரும் வகையிலும் , அக்கலை களை அழியாமல் பாதுகாப் பதற்கும்,அவற்றில்ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்குசமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறுநலத்திட்ட உதவி களை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட, “தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் ” 2007–ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர்,கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடுஅரசால்வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் தலைவர் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து ,அதன் புதிய தலைவராகவாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதோடு, தமிழ்நாடுநாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர்வகிப்பார் என முதலமைச்சர்அறிவித்துள்ளார்.
வாகை சந்தி ர சேகர்தமிழ்த் திரைப்படத் துறையில் தனதுகுணச்சித்திரநடிப்பால் தனக்கென ஒரு தனிஇடத்தைப் பெற்றிருந்தகாரணத்தால்,இவரதுநடிப்பாற்றலைப் பாராட்டி, 1991 -ம்
ஆண்டு,கலைஞர்இவருக்கு“கலைமாமணி விருது’’வழங்கிச் சிறப்பித்தார் .அதோடுமட்டுமல்லாமல்,2003- -ம்ஆண்டு ஒன்றியஅரசால் வழங்கப்படும் சிறந்தநடி க ருக்கான “தேசிய
விருது’’உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றவர்வாகை சந்திரசேகர்.
இவர்1996 ம்ஆண்டுமுதல்2001ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் உறுப்பினர்செயலராகப் பதவிவகித்து,சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். அதோடு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டு,2016முதல் 2021 வரை அந்தத்தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.