செதுக்கிய சிலை மாதிரி உடம்பு மல்லிகா ஷெராவத்துக்கு.! கவர்ச்சியின் அடையாளமாக தன்னைக் காட்டிக்கொண்டவர்.இந்தி,தமிழ் ,சைனீஸ்,இங்கிலீஸ் மொழிப்படங்களில் நடித்திருப்பவர்.உடம்பு காட்டுவதற்கு தயங்கியதில்லை.!கற்கண்டு உதடுகள் என்று மயங்கினால் கரும்பு என உடல் திறந்தவெளி பல்கலைக் கழகமாகி விடுவார்.
இவருக்கு லாசேஞ்சல்ஸில் கவுரவ குடியுரிமை.!
இவர் சொல்கிறார் :
பெண்களைப்பற்றிய இந்தியர்களின் பார்வை இப்போது மாறி இருக்கிறது.நிர்வாணத்தை ரசிக்கிறார்கள். வெப் சீரியல்களில் வரும் நெருக்கமான படுக்கை அறைக்காட்சிகளை விரும்புகிறார்கள்.எழுத்தாளர்களும் பெண்களுக்கான காட்சிகளை வித்தியாசமாக துணிச்சலாக எழுதுகிறார்கள்.
என்னைப்பற்றி சில மீடியாக்கள் வன்மம் வைத்து எழுதின.இல்லாததை எழுதி என்னைக் காயப்படுத்தினார்கள். நான் நொறுங்கிப்போனேன்.அவர்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் நான் நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாகி விட்டது.