இறுதி சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் மாதவனுக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தாலும், ,உடனடியாக எந்த படத்தையும் ஒப்பு கொள்ளாமல், பல இயக்குனர்களிடம் கதைகளை மட்டுமே கேட்டு வந்தார்.இதில் இயக்குனர் கரு. பழனியப்பன் சொன்ன கதை பிடித்து போக உடனே ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திரைக்கதை பணி இன்னும் முழுமையடையாமல் இருப்பதால் இப்படம் குறித்த விஷயத்தை வெளியே கசியவிட வில்லை என்கிறார்கள். இப்படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து ராஜ் கிரண் நடிக்க போகிறாராம். .விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்கிறார்கள்.