நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட காரை இறக்குமதி செய்திருந்த விவகாரத்தில், நடிகர் விஜய் தரப்பில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கான இறக்குமதி வரியை விலக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை பின்னர் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக சில உத்தரவுகளை போட்டதுடன், சமூகத்துக்கு முன்னுதாரணமாக திரைப்படங்களில் திகழும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறே இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கூறியிருந்தார்.
மேலும் ,வரிவிலக்குக் கேட்டு மனு தொடர்ந்ததற்காகவும், வரிசெலுத்த தாமதமானதற்காகவும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருந்தார்.ஆனால் பின்னர் நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து அவர் செலுத்தவேண்டிய வரியை ஆகஸ்டு மாதமே கட்டிவிட்டதாக குறிப்பிட்ட விஜய் தரப்பு தனிநீதிபதியின் கருத்தை நீக்கவும் கோரியிருந்தது.
இந்நிலையில் இம்மனு குறித்து பரிசீலித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சஃபீக் அமர்வு இந்த விவகாரத்தில் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய மேற்சொன்ன கருத்து பகுதிகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.