
“தம்பி, அட்லீ ! வெயிட் பார் டு மோர் இயர்ஸ் ! இன்னும் ரெண்டு வருசம் காத்திரு!” என்று தளபதி விஜய் சொல்லிட்டாராமே ! அப்பறம் என்னப்பு ,இன்னும் நிறைய வெஸ்டர்ன் மூவிஸ் பாக்க டைம் இருக்கே. பாத்துட்டு அப்புறமா வெரைட்டியா கதை பண்ணுங்க்ப்பூ.!”
அட்லி சொன்ன ஸ்டோரி லைன் பாலிவுட் பாஷா கானுக்கு திருப்தி இல்லை. திருப்பி அடிச்சிட்டாரு. ஆத்மார்த்தமாக தேடலில் ஷாருக் கானுக்கு அட்லி சொன்ன கதை திரைக்கதை ரொம்பவும் கம்பி கட்ற மாதிரி இருந்திருக்கு.
அதனால அரபி குத்து போட்டு விஜய் பக்கம் சாஞ்சிருக்கார்.பப்பு அங்கேயும் வேகலை !இதுதான் தம்பி அட்லியின் இப்போதைய நிலைமை.!

அட்லீயினால் பாதிக்கப்பட்ட இன்னொரு ஜீவனும் இருக்கு. அது வேற யாருமில்ல .நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான்.! விவரித்த தம்பி விட்ட கதை வேற லெவல். ஷாருக் தன்னோட மகன் மீதான வழக்குகளை முடிச்சிட்டு லயன் கர்ஜிக்க ஆரம்பிக்கும்னு அவுத்து விட்டிருக்கார்.
ஆனா ரன்பீர் கபூர் நேரா விக்னேஷ் சிவனை மீட் பண்ணி தனக்கு கதை பண்ண சொல்லிட்டார். இப்ப ரன்கபீர் கபூர் பக்கம் நயன்.!இதற்கிடையில் காதலனுடன் சேர்ந்து நயன் ஒரு குஜராத்தி படம் பண்ணப்போறார்.
இப்ப தெரியிதா தம்பி அட்லீ சரிஞ்ச கதை.!