நடிகை ஜோதிகா கடந்த ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மறு பிரவேசம் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார், இந்நிலையில், நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில் ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் த ற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம்,படப்பிடிப்பு தொடங்கும் முன்னர் படக்குழுவினர் அனைவரும் ஒத்திகை பார்க்க முடிவு செய்துள்ளனராம். இதையடுத்து, இன்று முதல் 20 நாட்கள் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் அதன்பின்னர் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும்செய்திகள்வெளியாகியுள்ளது.இந்த ஒத்திகையில் ஜோதிகா உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்