கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உலகநாயகன் கமல்ஹாசன்,தாம் குணமடைய விரும்பி செய்தி அனுப்பிய ரசிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார் கமல்ஹாசன்.அதில்,
“என்பால் எப்போதும் , என்றென்றும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும்,நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் ,பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றி பல! எனக்கு சிறு விபத்தோ,ஆபத்தோ ஏற்பட்டால் கூட, கேவிகள் பலவற்றுடன் வீறுகொண்டு எனை காக்க எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதன்றி வேறு என்ன செய்ய! இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லையே . பதிலுக்கு அன்பும்,கலையும், அதை செய்ய, நான்ஏற்ற பல பாத்திரங்களும் தான். எனக்கு நடக்கும் நல்லதோ கெட்டதோ அதை உங்களுக்கு தெரிவிக்க கடமைபட்டுள்ளேன் .வெற்றிகளும் விபத்துகளும் என் கதையில் விசித்திரமல்ல! சில இடர்களை கடந்து பல பாடங்களை கற்றவன்,ஆனால் பல விபத்துகளை கடந்தும்,பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று!ஆயிரம் வேலைகளும், ஆர்பரிக்கும் ரசிகர்களும்,எனக்காக காத்திருக்கையில் இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான்!ஆனால் நல்ல மருத்துவர்களும்,அவர்கள் உதவியாளர்களும்,என் சிறு குடும்பமும் உடன் நிற்க,எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன்.எப்படியிருக்கீங்க?எப்ப பார்க்கலாம்! என்று கேள்விகள் கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும்,என்னவாயிற்று, என் நன்பனுக்கு,அண்ணனுக்கு,அப்பனுக்கு,தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும்,பதில் சொல்ல, நலம் பெற்று திரும்புவேன்! எழுந்து அமர்ந்து இக் கடிதத்தை எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன்! அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லா உங்கள் அன்பன் கமல்ஹாசன்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார் .