
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் டிரைலரை வெளியிட தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கின்னஷ் கிஷோர் பேசியதாவது:-
“வரும் 9ஆம் தேதி ‘தாதா’ திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யோகிபாபு 4 சீனில் வருகிறாரா? 40 சீனில் வருகிறாரா என்று நீங்கள்தான் மக்களுக்கு சொல்லவேண்டும். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தில் உதவியாக நின்ற என்னுடைய படவிழாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வராதது வருத்தமளிக்கிறது. யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். ஊடகங்களுக்கு இப்ப சொல்றேன் இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? வியாபார நேரத்தில் படம் வாங்க முன் வந்தவர்களை அவர்களுக்கு போன் செய்து அந்தப் படத்தை வாங்காதீர்கள் என்று கெடுதல் நினைத்தார். எனக்கு இன்னொரு படம் படம் நடித்துக்கொடுப்பதாக சொல்லி பணமும் வாங்கியிருக்கிறார். ஆனால் இப்போது அந்த பணத்தையும் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. தாதா வியாபாரத்தையும் கெடுத்தார். அதனால் எனக்கு படம் நடித்துக்கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.”
விழாவின் முடிவில் மேடையில் இருந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக குரல் எழுப்பி யோகிபாபுவுக்கு கண்டம் தெரிவித்தனர்.