‘ஜெயிலர்’ படத்தில் மும்முரமாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள “லால் சலாம்” படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை முடித்து விட்டே மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் த.செ. ஞானவேல் என்கிறார்கள்.