கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை மீனாவின் கணவர் உடல்நலக்குறைவுகாரணமாக காலமானார். அதிலிருந்து தோழிகளின் துணையுடன் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில்,சில சமூக வலைத்தளங்களில் நடிகை மீனாவுக்கு இரண்டாம் திருமணம் மற்றும் கர்ப்பமாக இருப்பதாகவும் வதந்திகள் வெளியானது.
இது குறித்து பேட்டி ஒன்றில் நடிகை மீனா,என் கணவர் இல்லை என்பதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. தற்போது என் மகளின் எதிர்காலம் பற்றியும், என் படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தி வருகிறேன் என கூறியிருந்தார்
இந்நிலையில் நடிகை மீனா குறித்து பரவிய வதந்திகள் பற்றி அவரது மகள் நைனிகா உருக்கமாக பேசியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சமீபத்தில் நடிகை மீனாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் , சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட 80, 90களின் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மீனாவின் மகள் நைனிகா பேசுகையில், “அப்பா இறந்த பிறகு அம்மா ரொம்பவே டிப்ரஸனில் இருந்தாங்க. ரொம்பவே வலியை அனுபவிச்சாங்க.
என் முன்னாடி நிறைய தடவை அழுதிருக்காங்க. ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க: . என் அம்மா பத்தி நிறைய பொய் செய்திகள் வெளியாகுது. . அது ரொம்பவே ஹர்ட் ஆக்குது. அவங்க ஒரு கதாநாயகியாக இருக்கலாம். ஆனால் அவங்களும் ஒரு மனுஷி தான். அவங்களுக்கு பண்ண மாதிரி உங்களுக்கு பண்ணா எப்டி இருக்கும். ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க. எனக்காக அதை நிறுத்திருங்க ” என உருக்கத்துடன் பேசியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது