ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாகவும் இருப்பவர் நடிகை ரோஜா.
தமிழ்சினிமாவில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு இணைந்தார்.
அந்த கட்சியின் தெலுங்கு மகிளா அணி தலைவராக இருந்த நடிகை ரோஜா 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா, பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்ட சபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நடிகை ரோஜா எம்எல்ஏவானார்.தற்போது அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக உள்ளார்
.இந்நிலையில் நடிகை ரோஜா, நேற்று இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.