இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதை பாராட்டி மும்பையில் நேற்று, பாராட்டு விழா மற்றும் இளையராஜா இசையில் உருவான ஷமிதாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த இந்த விழாவிற்கு நடிகர் அமிதாப் பச்சன் தலைமை வகித்தார்..விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன்,அக்சரா ஹாசன் , தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ்உள்பட பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்சரா ஹாசன் கதாநாயகியாக அறிமுகம் என்பதாலும் ,விழா மும்பையில் நடப்பதாலும் விழாவில் சரிகா தனது மகள் ஸ்ருதி ஹாஸன் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கமல் ஹாஸன் தனது முன்னாள் மனைவி சரிகாவை பார்த்ததும் புன்னகை புரிந்தபடி ,அவர் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றார். சரிகாவின் அருகில் சென்ற கமல் அவரின் கையைப் பிடித்து பாசமுடன் நலம் விசாரித்தார். பிரிந்து சென்றபோதிலும் கமல் வந்து பேசியதும் சரிகாவின் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.கமல் முகத்திலும் அப்படியே!, என்னதான் இருந்தாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்களாச்சே! விழாவுக்கு வந்திருந்த அனைவரின் பார்வையும் இவர்களின் மீது தான் . தனது அம்மாவும், அப்பாவும்நீண்ட வருடங்களுக்கு பின்பு நேரில் சந்தித்து பேசுவதை சரிகாவின் அருகில் அமர்திருந்த ஸ்ருதி கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் கண்களில் ஓரம் ஈரம் கசிந்ததையும் காண முடிந்தது. இதில்,அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் , விழாவுக்கு கமலும் சரி, சரிகாவும் சரி கருப்பு நிற உடையில் வந்திருந்தது தான்.