மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , விஷ்ணு விஷால் , பார்த்திபன் , ஸ்ரீ திவ்யா , தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி ,D.N. தாய் சரவணன் , இசையமைப்பாளர் இமான் , ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா , எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா , இயக்குநர் பா.ரஞ்சித் , பாண்டி ராஜ் , ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, , இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச்சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார்.
எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும் ஏன்னென்றால் அவர் உலக நாயகன் கமல் ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர். விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர். விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. iஇப்படத்தின் படபிடிப்பு நன்றாக நடக்க மிகமுக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவனன்னுக்கு நன்றி அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படபிடிப்பு நன்றாக நடக்க உதவினார். மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும் என்றார் இயக்குநர் சுசீந்தரன்