இன்று 22.1.2024 மாலை 4 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில் தலைவர். நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் புதுச்சேரி மாநில கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு. G.R.சந்திரமோகன், மாநில நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தலைவர் நம்மவர் அவர்கள் வரும் நாடாளுமன்ற மற்றும் அடுத்து வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல்களை கட்சி அணுக வேண்டிய முறை பற்றியும், கட்சி வளர்ச்சி பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் கட்சி பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கருத்துரையாற்றினார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் திரு. R. தங்கவேலு மற்றும் மாநில செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












