
ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கியது.
நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்இ றுதியில் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்தனர் ,இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.