அருந்ததி , ருத்ரமாதேவி, பாகுபலி,என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா, பாகுபலி -2 வெளியீட்டுக்கு பின் ,திடிரென தன் கோலிவுட் உதவியாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாராம்.அதோடு கமிட் ஆன ‘ 3 ‘ தெலுங்கு படங்களை வேகவேகமாக முடித்துக்கொடுத்து வருகின்றாராம்.
இதற்கு காரணம் எப்போது வேண்டுமானாலும் இவரின் திருமண அறிவிப்பு வரலாம் என்பது தானாம்.விரைவில் பிரமாண்ட யோகா மையம் ஒன்றையும் திறக்கவுள்ள அனுஷ்கா திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு, இனி தன் கவனம் முழுவதையும் அந்த யோகா மையத்தில் தான் என முடிவு எடுத்துள்ளாராம்.