நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்து வைத்தார். இவ்விழாவில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில்,சென்னை அம்பத்தூரில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். தற்போது அந்த கோயிலுக்கு எதிரில், தனது அம்மா கண்மணிக்கு புதிய கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார்.உலகிலேயே அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ். அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது. அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்துவைத்தார். மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. .ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள அம்மா கோவிலில் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் லாரன்ஸ் நிறுவி உள்ளார்.உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டிய தாயை தயவு செய்து அனாதை இல்லத்தில் விட்டு வேதனைப்படுத்த வேண்டாம், என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.