தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் கூட்டு முயற்சியில், அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்! இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது..
”சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய ‘சொடக்கு’ படம் வருவது பெரிய பிளஸ். இது த்ரில்லர் படம்.
‘சொடக்கு’ டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்க படம் வீட்டுச் சாப்பாடு மாதிரி.உடம்பை உற்சாகம் படுத்தும் . ருசிக்க ருசிக்க சுவை தரும்.
‘சொடக்கு’ போடுகிற நேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையே மாறும். அப்படி ஒரு நேரத்தில் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்னென்ன நடந்தது என்பதுதான் இந்தக் கதை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அப்படி திருப்பிப் போடுகிற நிகழ்ச்சிகள் கொண்டு வந்து சேர்க்கிற சுவாரஸ்யங்களும், அதிரடி திருப்பங்களும் இதில் இருக்கும். இந்தக்கதை நமக்கு நெருக்கமாக இருக்கும் என்பது உண்மை. இன்னுமொரு விஷயமாக நாளை நடப்பது இன்றைக்கே நமக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படுகிற மாற்றங்களும், குழப்பங்களும் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் கதையாக இருக்கிறது. இந்த திரைக்கதை ஒரு த்ரில்லர் குடும்பத்தோடு பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும்.

நட்டி, கதையை உள்வாங்கிக் கொண்டு அதில் தன் இயல்பையும் கொண்டு வந்து சேர்கிறார். உங்களிடம் நல்ல பிரசன்டேஷன் இருக்கிறது. நல்ல கதை இருந்தால் தயக்கமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் போன் செய்யுங்கள். பேசலாம். படமும் பண்ணலாம் என்றார். எனக்கு இயக்குநர்கள் லிங்குசாமியும், சரணும் நெருங்கிய நண்பர்கள். என் உயர்வில் சந்தோஷப்படுகிறவர்கள். அவர்களின் முயற்சியிலும் இந்த கூட்டணி அமைந்தது. கயல் ஆனந்தி , ரக்ஷிதா, அபிஷேக், டத்தோ கணேசன் என நல்ல கூட்டணி அமைந்தது.
படங்களுக்கு வசனம் எழுதாத இயக்குநர் சரண் எனக்காக வசனத்தை எழுதினார்.
சொல்லில் வருவது பாதி என்பார்கள். அது மாதிரி டைரக்டர் சொல்வதை ஒரு மாதிரி புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒரு மாதிரி எடுப்பதெல்லாம் இங்கே நடக்கும். அப்படி எதுவும் இல்லாமல் அப்படியே நான் நினைப்பதை எடுத்தார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். இவர் ‘குரங்கு பொம்மை’யில் வித்தை காட்டியவர். இப்படத்தின் மியூசிக் டைரக்டர் அபிஷேக்.
உயிரையும், உணர்வையும் உறுத்துகிற விதத்தில் பாடல்களும், பின்னணியையும் செய்து கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் படித்த மாணவர் இவர்.
மலேஷியாவில் தான் கதை முழுக்கவும் நடக்கிறது. அதன் அழகையும் படம் பிடித்து இருக்கிறோம். படம் மொத்தமும் மலேசியாவில் படமானதற்கும் தயாரிப்பாளர்கள் முத்துக்குமார், தேவா அர்ஜுன், டத்தோ கணேசன் ஆறுமுகமும் உதவினார்கள்.

சினிமாவை படிக்க முடியாது. ஆனால் உணர முடியும் என்று ‘குயின் டிரான்சநாண்டோ’ சொன்னார். அதை நானும் உணர்ந்தவன். ஒரு நல்ல த்ரில்லருக்காகவும், ஒரு நல்ல கமர்ஷியலுக்காகவும் ‘சொடக்கு’ படத்தை பார்க்க வந்தால் அது வீண் போகாது. உரிய அழகியல் மதிப்போடு இன்றைய இளைஞர்களைக் குறிவைத்து உழைப்பை விதைக்கிறோம். நிச்சயம் அறுவடை செய்வோம்.












