
திரை உலகிற்கு வழங்கப்படுகிற உச்ச விருது தாதா சாகேப் பால்கே அவார்டுதான்.!
அந்த விருது தமிழகத்துக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இசை ஞானி இளையராஜா ,பாரதிராஜா ஆகியோருக்கு வழங்கப்படவேண்டும் என்கிற வேண்டுதல்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பலவிதமான கருத்துகள் இருந்தாலும் ,அவை உண்மையாகவே இருந்தாலும் அதை விலக்கி விட்டு ரஜினிக்கு வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும்.
இந்த உயரிய விருதை ரஜினிக்கு கொடுப்பதன் மூலம் ரஜினியின் ரசிகர்கள் பிஜேபிக்கு ஓட்டு போடுவார்கள் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். இதுவும் ஒரு யுக்திதானே! இல்லாவிட்டால் ரஜினியை தலைவா என சொல்லி பிரதமர் மோடி வாழ்த்து சொல்லவேண்டிய அவசியமில்லையே.!
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய நண்பர் ரஜினியை வாழ்த்தியிருக்கிறார்.
“தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” –என்பதாக கூறியிருக்கிறார்.












