
சில நேரங்களில் வதந்திகளும் வாய்மை பெற்றுவிடும். அப்படிதான் காவ்யா மாறன்-அனிருத் கல்யாண வதந்தியும் உண்மையாகிவிட்டது.
இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர். அனிருத்தும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன்குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும் காதலில் இருக்கிறார்கள் என்கிற செவி வழிச்செய்தி கடந்த ஆண்டிலிருந்து பேசப்பட்டு வந்தது. அண்மையில் அனிருத்தின் உறவினரான ஒய்ஜி.மகேந்திரன் அவர்களது காதலை உறுதி செய்கிற வகையில் பேட்டி கொடுத்திருந்தார். .
இதன் பின்னர்தான் இவ்வாண்டுக்குள் அனிருத் காவ்யாமாறன் திருமணம் நிச்சயமாக நடந்துவிடும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் அனிருத் காவ்யாமாறன் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
.நவம்பர் 12 ஆம் தேதி அனிருத் காவ்யா திருமணம் .
செஷல்ஸ் தீவில் திருமணம் . அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
,சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படலாம் .
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தனிவிமானத்தில் சென்று திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.












