
புரட்சி கலைஞர் சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், இளையவேள் ராதாரவி ஆகிய மூவர் மீதும் மானாவாரியாக மோசடிக் குற்றங்களை சொன்னவர் நடிகர் மனோபாலா.
நடிகர் சங்கத்தில் பெருத்த பண மோசடி நடந்ததாக மேடை தோறும் சொல்லி வந்தவர்.
இதனால் அவரை ராடான் நிறுவனம் முற்றிலுமாக புறக்கணிக்கநேர்ந்தது.
அந்த பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டார் மனோபாலா.
திரை உலகத்தில் மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களில் சரத்குமாரும் ஒருவர்.
திரை உலகை சேர்ந்தவர்களது குடும்ப நிகழ்ச்சிகளில் சரத்குமாரும் மனோபாலாவும் சந்திக்கும்போது பரஸ்பரம் ஹலோக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
சொந்தமாக படங்கள் எடுத்து அதனால் பல இன்னல்களை அனுபவித்து வருகிற மனோபாலாவுக்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றன அந்த சந்திப்புகள்.
மனம் வருந்தியிருக்கிறார் மனோபாலா.மறப்பதும் மன்னிப்பதும் மனிதம் .!
இதன் பலன் ராடான் டி.வி.யின் பிரமாண்டமான சந்திரகுமாரி தொலைக்காட்சித் தொடரில் சமூக காட்சிகளை இயக்கும் வாய்ப்பு மனோபாலாவுக்கு கிடைத்திருக்கிறது. சரித்திர நிகழ்ச்சிகளை இயக்குவது சுரேஷ் கிருஷ்ணா. மீண்டும் முருங்கமரம் தேடாமல் இருந்தால் சரி!












