Tuesday, June 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

admin by admin
June 23, 2026
in INTERVIEW, News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.
ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…
“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள்  பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், தனது பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது புதிய படமான கான் சிட்டி குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.
தனது கதாபாத்திரம் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், தற்போது பல்வேறு வகையான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருவதாக தெரிவித்தார். “நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை,” என்று சிரித்தபடி மறுத்தார்.
ரசிகர்கள் தன்னிடம் அதிகமாக கேட்கும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்றார்.
கான் சிட்டி படத்தில் தன்னுடன் நடித்த கலைஞர்களைப் பற்றியும் அவர் பாராட்டிப் பேசினார். “படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,” என்று கூறினார்.
குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார்.
“நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.
எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.
தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.
“ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அது கதைக்குள் சரியாக பொருந்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.
மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும்போது, பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.
admin

admin

Related Posts

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!
News

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

by admin
June 22, 2026
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!
News

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

by admin
June 22, 2026
பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!
News

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

by admin
June 22, 2026
மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 21, 2026
அர்ஜூன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது!
News

அர்ஜூன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 21, 2026

Recent News

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

June 22, 2026
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

June 22, 2026
பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

June 22, 2026
மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

June 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?